
ஒரே நாடு. ஒரே அரசியல் அமைப்பு. ஒரே ஒன்றிய அரசாங்கம். ஆனாலும்… உத்தரப் பிரதேசத்தில் ஒரு பெண் குழந்தை பிறக்கிறது, கேரளாவில் இன்னொரு பெண் குழந்தை பிறக்கிறது. இவர்கள் இருவருக்குள்ளான வாழ்க்கை தரத்திலான வித்தியாசம் வியக்க வைக்கும் அளவுக்கு இருக்கிறது.
தென்னிந்தியாவில் பிறக்கும் அந்தக் குழந்தைக்கு –
✅ ஒரு வயதிற்குள் உயிரிழக்கும் வாய்ப்பு குறைவாக இருக்கும்
✅ தாயும் குழந்தையும் பாதுகாப்பாக இருப்பதற்கான சாத்தியங்கள் அதிகம்
✅ சிறந்த ஊட்டச்சத்து, பள்ளிக்கல்வி, கல்லூரி வாய்ப்புகள்
✅ சிறுவயதில் திருமணம் செய்வதில்லை
✅ குறைந்த குழந்தை பிறப்புகள்
✅ உயர் கல்வியுடன் வளமான வாழ்க்கை
இவை எல்லாம் தரவுகள் சொல்லும் உண்மை!
வாழ்க்கை தரத்தில் தெற்கின் முன்னிலை
“South vs North: India’s Great Divide” என்ற நூலை எழுதியுள்ள நீலகண்டன் ஆர். எஸ். ஒரு data scientist. அவரது இந்த நூலில் தெற்குக்கும் வடக்குக்கும்ம் இடையேயான வாழ்க்கை தர வித்தியாசங்கள் தெளிவாக எடுத்துரைக்கப்படுகின்றன.

குழந்தை மரண வீதம் (1,000 பிறப்புகளுக்கு):
- கேரளா: 7
- தமிழ்நாடு: 15
- உத்தரப் பிரதேசம்: 43
- மத்திய பிரதேசம்: 48
கேரளாவின் நிலை அமெரிக்காவுக்கே நிகராக இருக்க, உத்தரப் பிரதேசம், மத்திய பிரதேசம் போன்ற மாநிலங்கள் போர் நிலமையிலுள்ள நாடுகளுக்கு ஒப்பாக இருக்கின்றன.
ஒரு கேள்வி:
கேரளாவில் பிறக்கும் குழந்தை, உத்திரபிரதேசத்தில் பிறக்கும் குழந்தையைவிட சராசரியாக எத்தனை ஆண்டுகள் மேலாக உயிர் வாழும்?
உங்கள் பதிலை யோசிச்சு வைங்க… – பதில் கீழே உள்ளது!

ஊட்டச்சத்து, குழந்தைப் பாதுகாப்பு, மருத்துவம்
- ஊட்டச்சத்து குறைபாடு (5 வயதுக்குள்):
- கேரளா: 20%
- தமிழ்நாடு: 27%
- பீகார்: 48%
- உத்தரப் பிரதேசம்: 46%
- அங்கன்வாடி மையங்கள் நிலையான கட்டடத்தில் இயங்கும் விகிதம்:
- தமிழ்நாடு: 100%
- மேற்கு வங்காளம்: 9%
- பிறந்த குழந்தையின் எடையை அளக்கும் கருவிகள் உள்ள மையங்கள்:
- தமிழ்நாடு, கேரளா: 100%
- உத்தரப் பிரதேசம்: 20%, அஸ்ஸாம்: 19%
கல்வி வளர்ச்சியும் தெற்கின் முன்னிலை
- எழுத்தறிவு விகிதம்
- பள்ளி இடைநிறுத்தம் குறைவாக இருக்கிறது
- பெண்கள் 10 ஆண்டுகளுக்கும் மேலாக கல்வி பெறும் விகிதம்
- கல்லூரி மாணவர் சேர்க்கை
- உயர் கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதம்
இவை அனைத்தும் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தெற்கு மாநிலங்களில் மேலோங்கியுள்ளன.

வேலைவாய்ப்பு, தொழில்துறை வளர்ச்சி
- விவசாயத்திற்கு வெளியான வேலைகளில் தினக்கூலி அதிகம்
- தொழில்முனைவர்கள், புதிய தொழில் தொடக்கங்கள்
- உயர் தொழில்நுட்ப வேலைவாய்ப்புகள்
- மத்திய அரசுக்கு அதிக வரி செலுத்தும் மாநிலங்கள் தமிழ்நாடு, கேரளா உள்ளிட்ட தென்னிந்திய மாநிலங்களே
இதற்கான முக்கிய காரணங்கள்
- சமூகநீதி மற்றும் சுயமரியாதையை வலியுறுத்திய இயக்கங்கள்
- மொழி மற்றும் பண்பாட்டு அடையாளங்களை உறுதிப்படுத்திய அரசியல் இயக்கங்கள்
- அரசுத் திட்டங்களை மக்களிடம் கொண்டு சென்று செயல்படுத்தும் திறமையான நிர்வாகம்
- கடலோர மாநிலமாக இருப்பதால் ஏற்பட்ட வர்த்தக வளம்
- மக்கள் நலத்திட்டங்களை (மதிய உணவு, அங்கன்வாடி, சுகாதார திட்டங்கள்) திறம்பட செயல்படுத்திய முறை

உங்கள் கணிப்புக்கு விடை:
- பிறந்தவுடன் எதிர்பார்க்கப்படும் ஆயுள்:
- கேரளா: 75.2 ஆண்டுகள்
- உத்தரப் பிரதேசம்: 65.6 ஆண்டுகள் ➤ தெற்கில் பிறக்கும் குழந்தைக்கு, வட மாநிலங்களை விட சராசரியாக 10 ஆண்டுகள் மேலாக வாழும் வாய்ப்பு உள்ளது!
‘இந்தி படிக்காம போனதால்தான் வளர்ச்சியே இல்லை’ன்னு சொல்பவர்கள் உண்டு. ஆனால், ஆதாரபூர்வமான புள்ளிவிவரங்கள் சொல்வது மாறுபட்ட உண்மையை.
இது வடக்கு vs தெற்கு போட்டி அல்ல.
இந்தியாவின் ஒவ்வொரு மாநிலத்திலும் வாழும் மக்களுக்கு சம வாழ்வாதார வாய்ப்பு, பாதுகாப்பு, கல்வி, மருத்துவம், சமூக உரிமைகள் வழங்கப்படவேண்டும் என்பதே இப்புத்தகத்தின் நோக்கம்.
நாம் தெற்கில் பெற்ற நலன்களை, மற்ற மாநிலங்களிலும் எப்படி நிலைநாட்டலாம் என்ற பயணமே இந்த நூலின் அடிப்படை.